Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மே 31, 2024 10:20 AM

Follow on Google

ADDED : மே 31, 2024 10:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*தேவையான இடத்தில் பொய் சொல்லலாமா?

எல்.சந்தோஷ், சிவகிரி, தென்காசி.

சுயநலம் கூடாது. தர்ம வழியில் நன்மை நடக்கும் என்றால், பொய் சொல்வது பாவம் ஆகாது.

*மறையுடையாய் தோலுடையாய்... பதிகத்தின் சிறப்பை சொல்லுங்கள்.

எல்.மகாதேவன், ஒசகோட்டே, பெங்களூரு.

வரம் தரும் அற்புதப் பதிகம் இது. திருஞானசம்பந்தர் இதில் 'குறையுடையார் குற்றம் ஓராய்' என்கிறார். அதாவது குற்றம், குறை உள்ளவர்களுக்காக சிவனிடம் இப்பாடல் மூலம் மன்னிப்பு கேட்கிறார்.

*தர்ப்பை புல்லின் சிறப்பு என்ன?

எம்.மாலதி, வில்லிவாக்கம், சென்னை.

மின்சாரத்தைக் கடத்தும் செப்புக் கம்பி போல, மந்திரஒலி அதிர்வுகளை தெய்வத்திடம் சேர்ப்பது தர்ப்பை புல்.

*சுவாமிக்கு நைவேத்யம் செய்யும் போது திரையிடுவது ஏன்?

கே.ராஜி, நொய்டா, டில்லி.

நைவேத்யம் செய்யும் போது திருஷ்டி தோஷம் ஏற்படலாம். அதனால் திரையிடுவது அவசியம்.

*பொறாமை, புறம் பேசுதல் இரண்டும் ஒன்றா...

வி.சுகந்தி, கொட்டாம்பட்டி, மதுரை.

இல்லை. பிறர் வளர்ச்சி கண்டு ஆத்திரப்படுவது பொறாமை. ஒருவர் இல்லாத போது அவதுாறு பேசுவது புறம் பேசுதல். அதாவது இல்லாத பிரச்னையை உருவாக்குதல்.

*மாணவர்களுக்கான முதன்மை பண்பு எது?

வி. அம்பிகா, கண்டமங்கலம், புதுச்சேரி.

பெற்றோர், ஆசிரியர் சொல்லும் நல்ல விஷயங்களை பின்பற்றுதல்.

*திருவோட்டை தானமாக கொடுக்கலாமா?

எம்.கேதார்நாத், மடத்துக்குளம், திருப்பூர்.

துறவிகளுக்கு மட்டும் தானமாக கொடுங்கள்.

*புண்ணியம், பாவம் என்பது என்ன?

கே.ரோகிணி, அஞ்சுகிராமம், கன்னியாகுமரி.

தர்மத்தின் அடிப்படையில் பிறருக்கு நன்மை தரும் செயல் புண்ணியம். பிறருக்கு துன்பம் தரும் செயல் பாவம்.

*பூலோக கைலாயம் என்றால் என்ன?

எஸ்.சுரேந்தர், கடமலைக்குண்டு, தேனி.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றாலும் சிறப்பு மிக்க சிவத்தலங்கள் பூலோக கைலாயம். உ.ம். சிதம்பரம், மதுரை, திருவையாறு, திருவாரூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை.

*முருகபக்தரான குமரகுருபரர் முக்தி அடைந்த நாள் எது?

சி.ஆருத்ரா, வடக்கிபாளையம், கோயம்புத்துார்.

பிறந்த நட்சத்திரம் பற்றிய குறிப்பு இல்லை. திருச்செந்துார் அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த இவர் சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டு செய்தார். வைகாசி தேய்பிறை திரிதியை திதியில் சிவனடி சேர்ந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap