Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

ADDED : அக் 23, 2019 02:59 PM


Google News
Latest Tamil News
ஸ்லோகம்

அப்யாஸ யோக யுக்தேந சேதஸா நாந்ய காமிநா!

பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்தாநு சிந்தயந்!!

கவிம் புராண மநுஸாஸிதாரம்!

அணோரணீயாம் ஸமநுஸ்மரேத்ய:

ஸர்வஸ்ய தாதாரம சிந்த்யரூபம்

ஆதித்ய வர்ணம் தமஸ: பரஸ்தாத்!!

ப்ரயாண காலே மநஸாசலேந

பக்த்யா யுக்தோ யோக பலேந சைவ!

ப்ருவோர் மத்யே ப்ராணமாவேஸ்ய ஸம்யக்

ஸ தம் பரம் புருஷமுபைதி திவ்யம்!!

(8 ம் அத்யாயம் அக்ஷர ப்ரஹ்ம யோகம்)

பொருள்: அர்ஜுனா! பக்தியால் உலக விஷயங்களில் நாட்டம் இன்றி வாழ்பவன் பரம்பொருளை அடையும் பேறு பெறுகிறான். எல்லாம் அறிந்தவரும், ஆதி அந்தம் இல்லாதவரும், எல்லாவற்றையும் ஆள்பவரும், நுட்பம் மிக்கவரும், எல்லாப் பொருட்களையும் தாங்கி நிற்பவரும், சிந்தனைக்கு எட்டாதவரும், சூரியனைப் போல ஒளி மிக்கவரும், அறியாமை அற்றவருமாக கடவுள் இருக்கிறார். எவன் ஒருவன் அவரைச் சிந்தித்தபடி

இறக்கும் தறுவாயிலும் தன் புருவ நடுவில் மனதை நிலைநிறுத்தி தியானம் செய்கிறானே அவன் கடவுளைச் சேரும் பாக்கியம் அடைவான்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us