Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பணக்காரர்கள் மட்டுமே வாழ்ந்த நாடு

பணக்காரர்கள் மட்டுமே வாழ்ந்த நாடு

பணக்காரர்கள் மட்டுமே வாழ்ந்த நாடு

பணக்காரர்கள் மட்டுமே வாழ்ந்த நாடு

ADDED : மார் 31, 2017 01:59 PM


Google News
Latest Tamil News
ராமர் ஆட்சியில், அயோத்தி மக்கள் அனைவருமே பணக்காரர்களாக வாழ்ந்தனர். இதை தெரிவிக்கும் கதை ஒன்று உண்டு. அயோத்தியில் வசித்த நவரத்தின வியாபாரியின் மகள், தன் திருமணத்திற்கு வரும்படி சீதைக்கு அழைப்பு விடுத்தாள்.

சம்மதித்த சீதைக்கு முத்துமாலையை பரிசாகக் கொடுத்தாள்.

அவளிடம் சீதை, “என்னிடம் ஏராளமாக நகைகள் இருக்கின்றன. யாராவது ஏழைக்கு கொடு,” என்றாள். அந்தப்பெண்ணோ அதை அரண்மனை வாசலில் போட்டுச் சென்றாள். பிறர் பொருள் மீது ஆசையில்லாத அயோத்தி மக்களுக்கும், அந்த மாலையை எடுக்கும் எண்ணம் வரவில்லை. அது மண்ணுக்குள் புதைந்தது. எல்லா மக்களும் செல்வந்தர்களாக இருந்ததை உணர்த்தும் நிகழ்ச்சி இது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us