Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சபரிமலை பெயர்க்காரணம்

சபரிமலை பெயர்க்காரணம்

சபரிமலை பெயர்க்காரணம்

சபரிமலை பெயர்க்காரணம்

ADDED : மார் 31, 2017 02:00 PM


Google News
சீதையைத் தேடிய ராம லட்சுமணர், மதங்க மகரிஷியின் சிஷ்யையான சபரியின் ஆஸ்ரமத்திற்கு சென்றனர். அவள் குருவின் அறிவுரைப்படி ராம தரிசனம் வேண்டி தவமிருந்தாள்.

ராமலட்சுமணரை கண்டதும் அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. காட்டில் சேகரித்த இலந்தைப் பழம், தேன், கிழங்கு ஆகியவற்றைக் கொடுத்தாள். அவளது அன்பைக் கண்ட ராமலட்சுமணர் ஆனந்தக்கண்ணீர் வடித்தனர்.

“ஐயனே! இன்று உங்களை தரிசிக்கும் பேறு பெற்றேன். உங்களைக் காண்பதற்காக இவ்வளவு காலம் என் உயிரைத் தாங்கியிருந்தேன். பிறவி எடுத்த பயனைப் பெற்று விட்டேன். எனக்கு விடை கொடுங்கள்.” என்று வணங்கினாள். அவள் உடலில் இருந்த உயிர் ஜோதி வடிவில் விண்ணுலகம் சென்றது. அவள் வாழ்ந்த மலைக்கு சபரிமலை என்று பெயர் வந்தது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us