ADDED : ஆக 14, 2012 09:08 AM

* பல தெய்வங்களை வணங்குவதைக் காட்டிலும் ஒரே தெய்வத்தை வணங்குவது நல்லது. இதனால், மனம் எளிதில் ஒருமைப்படும். பக்திக்கு இதுவே சுலபமான வழி.
* உலகத்தை உள்ளிருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடர் ஒருவரே! அவரே நம்மைச் சூழ்ந்திருக்கும் கோடிக்கணக்கான உயிர்களாகவும் இருக்கிறார்.
* தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்.
* பேச்சு ஒரு மாதிரியாகவும், செயல் வேறொரு விதமாகவும் உடையவர்களின் உறவு கூடாது.
* மனிதன் தன் மனமறிந்து எந்த பாவத்திலும் ஈடுபடுவது கூடாது. உண்மையின் வழியில் நடக்க வேண்டும். அப்படி நடக்காதவர்கள் அவமானம் அடைவது உறுதி.
* அஞ்சாமல் துணிவுடன் செயல்படுவதே ஆண்மை. இந்த குணம் பெற்றவர்கள் பிறர் எள்ளி நகையாடினாலும், கோபமாகப் பேசினாலும் பொருட்படுத்த மாட்டார்கள்.
- பாரதியார்
* உலகத்தை உள்ளிருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடர் ஒருவரே! அவரே நம்மைச் சூழ்ந்திருக்கும் கோடிக்கணக்கான உயிர்களாகவும் இருக்கிறார்.
* தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்.
* பேச்சு ஒரு மாதிரியாகவும், செயல் வேறொரு விதமாகவும் உடையவர்களின் உறவு கூடாது.
* மனிதன் தன் மனமறிந்து எந்த பாவத்திலும் ஈடுபடுவது கூடாது. உண்மையின் வழியில் நடக்க வேண்டும். அப்படி நடக்காதவர்கள் அவமானம் அடைவது உறுதி.
* அஞ்சாமல் துணிவுடன் செயல்படுவதே ஆண்மை. இந்த குணம் பெற்றவர்கள் பிறர் எள்ளி நகையாடினாலும், கோபமாகப் பேசினாலும் பொருட்படுத்த மாட்டார்கள்.
- பாரதியார்