Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/எல்லோரும் வாழவேண்டும்

எல்லோரும் வாழவேண்டும்

எல்லோரும் வாழவேண்டும்

எல்லோரும் வாழவேண்டும்

ADDED : பிப் 28, 2013 11:02 AM


Google News
Latest Tamil News
* மனதை உற்சாகமாக வைத்துக் கொண்டால், உடலும் நன்றாக இருக்கும். உடலை சுறுசுறுப்பாக்கினால் மனதில் உற்சாகம் நிலைக்கும்.

* அறிவை அகங்கார மாசு மூடியிருக்கிறது. இதை நீக்கி விட்டால் தெய்வசக்தியும், ஞானமும் மேலோங்கும்.

* உடல் மட்டுமின்றி உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும். உள்ளத்தில் உண்மை உண்டானால் வாக்கிலும் ஒளியுண்டாகும்.

* எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்று உண்மையாக வேண்டினால், கடவுளும் மனமிரங்கி அருள்புரிவார்.

* அறியாமை என்னும் விஷப்பூச்சியை மனதிற்குள் நுழைய அனுமதிக்க கூடாது. இல்லாவிட்டால் இன்பம் அனைத்தும் காணாமல் போய் விடும்.

* இளம்வயதில் ஏற்படும் அபிப்ராயம் ஆற்றல் வாய்ந்தது. இதை மறப்பதோ, மாற்றுவதோ கடினம்.

* நெஞ்சில் ஈரமில்லாதவர்கள் கடவுளை அறிய முடியாது. இரக்க சிந்தனை இருந்தால் இறையருள் கைகூடும்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us