Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/காலத்தை எதிர்கொள்!

காலத்தை எதிர்கொள்!

காலத்தை எதிர்கொள்!

காலத்தை எதிர்கொள்!

ADDED : டிச 25, 2012 09:12 AM


Google News
Latest Tamil News
* ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருந்து விட்டால் நன்மை உண்டாகும்.

* பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன், தண்டனை வழங்கும் அதிகாரம் எந்த மனிதனுக்கும் கிடையாது.

* புறவுலகில் உள்ள வெளிப்பொருள்களில் எப்போது பற்று நீங்குகிறதோ அப்போது கடவுளை அறியும் ஞானம் உண்டாகும்.

* தவறு செய்தாவது பணத்தை மட்டும் தேட வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களை மேதாவிகள் என்று எண்ணிக் கொள்கிறார்கள்.

* கால வெள்ளத்தில் வரும் மாறுதல்களுக்கெல்லாம் மாறாமல், அவற்றைத் தனதாக்கிக் கொண்டு வாழும் திறமை நமக்கு வேண்டும்.

* எதை நினைக்கிறாயோ அதுவேயாகிறாய் என்பது உண்மையே. ஆனால், உலகம் அறியத்தக்க வகையில் நாம் உண்மையானவர்களாக இருக்க வேண்டும்.

* நன்மை எது என்று அறிந்த பிறகும், தீமையைக் கைக்கொள்வது கண்ணைத் திறந்துகொண்டு கிணற்றில் குதிப்பது போலாகும்.

- பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us