Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/சக்தியின் பாதம் சரணடைவோம்

சக்தியின் பாதம் சரணடைவோம்

சக்தியின் பாதம் சரணடைவோம்

சக்தியின் பாதம் சரணடைவோம்

ADDED : மே 03, 2010 12:41 PM


Google News
Latest Tamil News
* அன்னை பராசக்தியின் பாதமலர்களைச் சரணம் என்று அடைக்கலம் புகுந்தாலும், பக்தி கொண்டு வாழ்ந்தாலும், அவளது புகழைப் பாடினாலும் அழியாத பேரின்பவாழ்வு வாழ்வு கிடைக்கும். நம் கவலையைப் போக்கி அருள் செய்வாள்.

* பராசக்தியிடம் சுகத்தை வேண்டி வணங்குங்கள். அவளிடம் மனக்குறைகளை சொல்லி அழுங்கள். அவ்வாறு செய்தால், வாழ்வில் நல்ல மாற்றத்தையும், மனதிற்கு வலிமையும், ஆறுதலையும் தந்தருளுவாள்.

* தாயே! எங்களைக் காப்பது உன் கடன்! இவ்வுலக வாழ்வினையே உனக்காக அர்ப்பணித்துவிட்டேன். உன் துணை இருக்கும்போது மரணத்தைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை. நோய்,பேய், ரணம், பழி என்று இனி எதை எண்ணியும் சிறிதும் பயமில்லை.

* ஒளி பொருந்திய நீலநிறம் கொண்டவளே! எங்கள் சிந்தையில் நிறைந்திடும் திறம் உடையவளே! அச்சம், பொய், சினம் என்னும் பொய்ம்மைக் குணங்கள் எல்லாம் எங்களை விட்டுப் போகட்டும். உள்ளவுறுதியோடு வாழ்க்கையை எதிர்கொள்ள அருள்கொடு. உலகங்கள் அனைத்தையும் படைத்து, காத்து, அழிப்பவளே! உன்னருளால் சிந்தையும் தெளியட்டும்.

-பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us