Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/அன்புவழியில் நடப்போம்

அன்புவழியில் நடப்போம்

அன்புவழியில் நடப்போம்

அன்புவழியில் நடப்போம்

ADDED : மே 20, 2013 10:05 AM


Google News
Latest Tamil News
* மனதில் அச்சத்திற்கு இடம் அளிக்கக் கூடாது. உச்சிவானம் இரண்டாகப் பிளந்து நம் மீது விழுந்தபோதும் அச்சம் கொள்ளக்கூடாது.

* உலகில் ஜாதிகள் இரண்டைத் தவிர வேறில்லை. நீதிவழியில் வாழும் நேர்மையானவர்கள் மேல்ஜாதியினர். மற்றவர்கள் கீழ் ஜாதியினர்.

* அன்பு உள்ள இடத்தில் அச்சத்திற்கு இடம் இருப்பது இல்லை. கவலை, சோர்வு, அச்சம் ஆகிய பண்புகள் அனைத்தும் அன்புணர்வால் அகற்றப்படுகின்றன.

* மனக் கட்டுப்பாட்டுடன் வாழ்தல், பிறர் நலம் வேண்டுதல், துன்பம் கண்டு இரங்குதல், இறைவனைப் போற்றுதல் இவையே ஒரு மனிதன் ஆற்ற வேண்டிய கடமைகள்.

* இருப்பது ஒரே தெய்வம் மட்டுமே. அதனையே ஆயிரமாயிரம் பெயர்களால் வணங்குகிறோம்.

* அன்பைக் காட்டிலும் சிறந்த தவநெறி வேறில்லை. அதனால் மக்கள் அனைவரும் அன்பு வழியில் வாழ்ந்தால் இன்பம் அனைத்தையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

- பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us