Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/உலகை இயக்கும் பராசக்தி

உலகை இயக்கும் பராசக்தி

உலகை இயக்கும் பராசக்தி

உலகை இயக்கும் பராசக்தி

ADDED : செப் 20, 2011 10:09 AM


Google News
Latest Tamil News
* இறைவனை இயற்கை என்றும், தூய அறிவு என்றும், அன்பே சிவம் என்றும், சிவசக்தி என்றும் சொல்கின்றனர். எப்படி அழைத்தாலும் கடவுள் ஒருவரே.

* இறைவனைத் தாயாகவும், தந்தையாகவும், எஜமானனாகவும், குருவாகவும், தோழனாகவும் நினைத்து வழிபடலாம். அவரை நமது உறவினராக எண்ணி வழிபடும்போது, எளிதில் அருள் கிடைக்கும்.

* அச்சம், துன்பம் ஆகியவை எப்போதும் நம்மைத் தாக்க காத்திருக்கின்றன. சிவசக்தியை வணங்கினால் இவற்றிடம் இருந்து விடுதலை பெறலாம். அவளை என்றும் மறவாதீர்.

*அன்னை ஆதிபராசக்தியே அனைத்து உயிர்களாகவும், உலகமாகவும் விளங்குகிறாள். அவளது அருள் இல்லாமல் உலகில் எச்செயலும் நடப்பதில்லை. அவளது அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

* அன்னை பராசக்தி பஞ்சபூதங்களை அடக்கி உலகத்தை இயக்குகிறாள். அவளது திருப்பாதங்களில் சரணடைபவர்கள் சகல வெற்றியும் பெறுவர்.

- பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us