Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/தானியத்தைப் பதுக்காதீர்கள்

தானியத்தைப் பதுக்காதீர்கள்

தானியத்தைப் பதுக்காதீர்கள்

தானியத்தைப் பதுக்காதீர்கள்

ADDED : மே 03, 2010 12:42 PM


Google News
Latest Tamil News
* சரீர முயற்சியின் பலன் சிறிதளவே. ஆனால் தெய்வீகத் தன்மையோ எல்லாவற்றிலும் அதிகமான பலன் தருவதாகும். இப்போதைய வாழ்விற்கும் இனி வரப்போகும் வாழ்விற்கும் உறுதி தருவதாகும்.

* தானியத்தைப் பதுக்கி வைப்பவனைப் பொது ஜனம் சபிக்கும். ஆனால், அதை விற்பவன் தலையையோ வாழ்த்தும்.

* முட்டாளுக்கு அவனது புத்தியீனத்திற்கு ஏற்ப பதில் சொல். பதில் சொல்லாவிட்டால் அவன் தன்னை அறிவாளி என்று நம்பிக் கொண்டிருப்பான்.

* மிருதுவான பதில் சினத்தை மாற்றிவிடும். புண்படுத்தும் வார்த்தைகளோ ஆத்திரத்தைத் தான் கிளப்பிவிடும்.

* பணம் படைத்தவன் கடவுளின் ராஜ்ஜியத்திற்குள் நுழைவதை விட ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைவது அதிகச் சுலபம்.

* கடவுளின் கருணையை பணத்தால் விலைக்கு வாங்கிவிடலாம் என்று நீ நினைத்தபடியால் உன்னுடைய பணம் உன்னுடனே அழிந்து போகட்டும்.

* அறிவாளிகளைத் திகைக்கச் செய்ய உலகின் பைத்தியக்காரப் பொருள்களை கடவுள் தேர்ந்தெடுத்தார். பலமுள்ளவற்றைத் திகைக்கச் செய்யப் பலவீனமானவற்றைத் தேர்ந்தெடுத்தார்.

-பைபிள் பொன்மொழிகள்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us