Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/பிறரிடம் அன்பு செலுத்துங்கள்

பிறரிடம் அன்பு செலுத்துங்கள்

பிறரிடம் அன்பு செலுத்துங்கள்

பிறரிடம் அன்பு செலுத்துங்கள்

ADDED : ஆக 14, 2012 09:08 AM


Google News
Latest Tamil News
* அடக்குமுறையில் நம்பிக்கை வேண்டாம். கொள்ளையடித்து வீணாகிப் போக வேண்டாம். உன்னிடம் பணம் பெருகுமானால் அதன்மீது உன் இதயத்தை வைத்துவிடாதே.

* ஒடுக்கி அடக்கப்பட்டவர்களுக்கு கடவுளே அடைக்கலமானவர். கஷ்ட காலத்திலும் அவரே நமக்கு உதவுகிறார்.

* எந்நேரமும் கேளிக்கை, கூத்து என வாழும் பெண்மணி உயிரோடு இருந்தாலும் செத்தவளுக்கே சமமாவாள்.

* நாக்கு ஒரு சிறிய அங்கமாக இருந்தாலும் சிறிய விஷயங்களைக்கூட பிரமாதப்படுத்திவிடும்.

* ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவோமாக. ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.

* பலசாலியை விட கோபம் கொள்வதில் மிதமாய் இருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களைக் கைப்பற்றுபவனை விட தன் உணர்ச்சியை அடக்கி ஆள்பவனே சிறந்தவன்.

- பைபிள் பொன்மொழிகள்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us