Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/ஏழைகளுக்கு விருந்தளியுங்கள்

ஏழைகளுக்கு விருந்தளியுங்கள்

ஏழைகளுக்கு விருந்தளியுங்கள்

ஏழைகளுக்கு விருந்தளியுங்கள்

ADDED : ஜூலை 19, 2012 04:07 PM


Google News
Latest Tamil News
* ஒருவருக்கொருவர் கருணையோடும், வாஞ்சையுள்ளத்தோடும் ஒருவரை ஒருவர் பொறுத்து மன்னித்து நடவுங்கள்.

* உங்கள் வாழ்க்கை என்பது என்ன? சற்று நேரம் தோன்றி பிறகு மறைந்து போகும் ஒரு புகை. நம்மில் எவரும் தனக்காக வாழ்வதில்லை. தனக்காக சாவதும் இல்லை.

* மனிதனின் வாழ்நாட்கள் பற்களுக்கு ஒப்பானவை. வயலில் உள்ள பூவைப் போல அவன் செழிக்கிறான். காற்று அதன் மீது வீசியதும் பூ உதிர்ந்து விடுகிறது. அது இருந்த இடத்தை இனி அது அறியாது.

* சகலவிதமான மனக்கசப்பு, கோபதாபம், குரோதம், கூக்குரல், ஏச்சுபேச்சு ஆகிய துர்க்குணங்களை விட்டொழியுங்கள்.

* விருந்து செய்யும்போது ஏழைகளையும், ஊனமுற்றவர்களையும் கூப்பிடுவாயாக.

* நீ பகல்விருந்தோ, இரவு விருந்தோ நடத்தும்போது நண்பர்களையோ செல்வந்தர்களான அண்டை அயலாரையோஅழைக்கவேண்டாம். மறுதரம் அவர்களும் உன்னை அழைப்பார்கள். அப்போது அது உனக்கு பிரதிபலனாகி விடும்.

- பைபிள் பொன்மொழிகள்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us