Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சின்மயானந்தர்/மனதில் குடியிருக்கும் இறைவன்

மனதில் குடியிருக்கும் இறைவன்

மனதில் குடியிருக்கும் இறைவன்

மனதில் குடியிருக்கும் இறைவன்

ADDED : ஏப் 05, 2011 01:04 AM


Google News
Latest Tamil News
* உள்ளம் ஒரு நிறைவைக் காண விரும்பும் போது உடலின் துன்பத்தை நாம் பொருட்படுத்துவதில்லை. இதுவே வாழ்க்கையில் உயர்வு பெற நாம் கடைப்பிடிக்க வேண்டிய தத்துவம்.

* தினமும் தியானம் செய்யும் போது மனம் பக்குவம் அடைகிறது. கஷ்டம் வரும்போது அதைச் சமாளிக்கும் நிதானம் கிடைக்கிறது.

* உண்மையான பக்தி கொண்டவன், அனைத்து உயிர்களிடமும், அனைத்துப் பொருள்களிடமும் கடவுளைக் காண்கிறான்.

* இறைவன் நம் மனமாகிய வீட்டில் இருந்து நம்மை இயக்குகிறான். அவன் நமக்குத் தெரியாவிட்டாலும், அவனுடைய அருள் நம்முடைய வாழ்க்கையில் பல்வேறு பலன்களைத் தருகிறது.

* எங்கு சென்றாலும் மகிழ்ச்சியைத் தருபவர்கள் பண்புள்ளவர்கள். பண்பில்லாதவர்களால் அதைத் தர முடியாது.

* சாதாரண மனிதனின் சமூகத் தொண்டு கண்ணுக்குப் பெரிதாகப்படுகிறது. ஆனால், அதன் எல்லை மிகக் குறுகியது. ஞானிகள் உலக நன்மைக்காகச் செய்யும் பிரார்த்தனையின் வலிமை கண்ணுக்குப் புலப்படாதது. ஆனால் அதன் நற்பலன் எல்லை கடந்தது.

- சின்மயானந்தர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us