Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/நிம்மதிக்கு எளிய வழி

நிம்மதிக்கு எளிய வழி

நிம்மதிக்கு எளிய வழி

நிம்மதிக்கு எளிய வழி

ADDED : செப் 11, 2012 09:09 AM


Google News
Latest Tamil News
* பிறரது குறைகளை வெளிப்படுத்தக் கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே பார்க்க வேண்டும்.

* தேவை அதிகரிக்கத் தொடங்கினால் மனதில் அமைதி இருக்காது. குறைத்துக் கொண்டால் நிம்மதி தேடிவரும்.

* எண்ணத்தைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம். ஆனால், எண்ணியதை எல்லாம் பேசுவதையாவது குறைக்க முயற்சியுங்கள்.

* கடவுளின் நாமத்தைச் சொல்வதற்கோ, பக்திப் பாடலைப் பாடுவதற்கோ வெட்கப்படக் கூடாது. கடவுளின் நாமத்தால் பாவம் மறைந்தோடும்.

* வாழ்க்கை முறை சாத்வீகமாக இருந்தால், நம்மைச் சுற்றிலும் அமைதி பரவும். குடும்பமும் சமுதாயமும் பயன்பெறும்.

* மனதில் ஆயிரம் தீயஎண்ணங்களை வைத்துக் கொண்டு மற்றவருக்கு உபதேசம் செய்வதால் பயன் இல்லை.

* 15 நாளைக்கு ஒருமுறையாவது விரதம் இருக்கவேண்டும். மற்ற நாட்களிலும் மிதமாக உண்ணவேண்டும்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us