Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/இறைவன் மட்டுமே கெட்டிக்காரன்

இறைவன் மட்டுமே கெட்டிக்காரன்

இறைவன் மட்டுமே கெட்டிக்காரன்

இறைவன் மட்டுமே கெட்டிக்காரன்

ADDED : ஆக 06, 2010 10:08 AM


Google News
Latest Tamil News
* உடம்புக்கு எந்த துன்பம் வந்தாலும் துவண்டுபோய் விடக்கூடாது. நோய்வந்தாலும், வறுமை வந்தாலும், வேறு எந்த விதமான துன்பங்கள் வந்தாலும் அவற்றை வைராக்கியத்தை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

* ஆடம்பரத்திற்காக பல மனிதர்கள் ஊதாரித் தனமாகச் செலவழிக்கிறார்கள். போலி கவுரவத்தைக் காப்பாற்ற பிறரிடம் கடன் வாங்கிச் செலவழிக்கும் குணம் நல்லதல்ல.

* உலகில் அமைதி தவழவேண்டுமானால் சாத்வீகமான மரக்கறி உணவுவகைகளையே சாப்பிட வேண்டும்.

* குறைவான வருமானம் இருந்தாலும் அதற்கேற்றபடி தர்மத்துக்காக செலவழிப்பது அவசியம். தர்மம் செய்வதை தள்ளிப்போடுவது கூடாது. மனம் மாறக்கூடியதாக இருப்பதால் நினைத்தவுடன் தர்மம் செய்துவிடுவதே நல்லது.

* கெட்டிக்காரன் என்று மனிதன் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறான். இத்தனை பெரிய உலகத்தையும், உயிர்களையும் படைத்த மகா கெட்டிக்காரன் ஒருவன் இருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவனே இறைவன்.

-காஞ்சிப்பெரியவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us