Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/நல்லதையும் அன்பாகச் சொல்லுங்க!

நல்லதையும் அன்பாகச் சொல்லுங்க!

நல்லதையும் அன்பாகச் சொல்லுங்க!

நல்லதையும் அன்பாகச் சொல்லுங்க!

ADDED : நவ 16, 2010 05:11 AM


Google News
Latest Tamil News
* மனதிலுள்ள ஆசைகளைக் குறைப்பதன் மூலம் நமக்கு வரும் துன்பம் குறைந்து ஆனந்தம் பெருகும். வெளியிலுள்ள பொருட்களிலிருந்து நமக்கு ஆனந்தம்

வருவதில்லை, நம்மிடையே இருந்து தான் ஆனந்தம் பிறக்கிறது.

* உடல் மற்றும் மனரீதியாக செய்யும் பாவத்தை போக்க புண்ணியமான நினைப்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

* துக்கத்துக்கு விதை போட்டுக் கொண்டிருக்காமல் பாவத்தை போக்க தினமும் ஈஸ்வர தியானத்தில்

ஈடுபடுவது நல்லது.

* உலகத்தில் எவரும் பாவியாக இருக்க விரும்பவது இல்லை, ஆனால், பாவகாரியம் அதிகம் செய்கிறோம். அனைவரும் புண்ணியம் பெறத்தான் விரும்புகிறோம். ஆனால் புண்ணியச் செயல்களைச் செய்வதில்லை.

* ஒருவனுக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது, அதை அவன் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக் கூட கடுமையாகச் சொன்னால் அதை யாரும் ஏற்கமாட்டார்கள்.

* ஒருவனிடம் எத்தனை தோஷம் இருந்தாலும் அதனை பெரிதுப்படுத்தக்கூடாது. சிறிய அளவில் குண விசேஷம் இருந்தால் அதையே பெரிதாக கொண்டாட வேண்டும்.

- காஞ்சிப்பெரியவர்

 





      Our Apps Available On




      Dinamalar

      Follow us