Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/சத்தியம் இது சத்தியம்

சத்தியம் இது சத்தியம்

சத்தியம் இது சத்தியம்

சத்தியம் இது சத்தியம்

ADDED : அக் 04, 2010 08:10 PM


Google News
Latest Tamil News
 

* கண்டதை எண்ணி மனதை குப்பைத்தொட்டி போல ஆக்கிவிட்டோம். அதைச் சுத்தப்படுத்தி, கடவுளை வைத்து வழிபட வேண்டும். கடவுள் நாமங்களைச் சொல்லி புண்ணியம் தேடுவதே பிறவிப்பயன்.

* கடவுள் எங்கும் வியாபித்திருக்கிறார். உலக இயக்கங்கள் அனைத்தும் அவராலேயே நிகழ்கின்றன. அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று இதைத் தான் சொல்கிறோம்.

* தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க

முடியுமோ, அந்த அளவுக்கு எளிமையாக வாழ்வதும், முடிந்த அளவுக்கு தானதர்மங்கள் செய்வதும்

அனைவரும் பின்பற்றவேண்டியதாகும்.

* பிறவிப் பெருங்கடலைத் தாண்டிச் செல்வதற்கு குருவின் அருள் தேவை. எல்லாவிதமான இன்பத்திலும்

துன்பத்திலும் நமக்கு அருள்பாலிப்பவர் குரு தான். நம்முடைய அறியாமை அனைத்தும் குருவால் மட்டுமே அகலும்.

* சத்தியம் என்றால் வாக்கும், மனதும் ஒன்றுபடுவது

மட்டுமல்ல. நல்ல மனதில் தோன்றுகின்ற நல்ல

எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம் ஆகும்.

சத்தியத்தால் நல்ல விளைவுகள் மட்டுமே உண்டாகும்.

காஞ்சிப்பெரியவர்

 





      Our Apps Available On




      Dinamalar

      Follow us