Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/பத்து நிமிஷமாவது வணங்குங்கள்

பத்து நிமிஷமாவது வணங்குங்கள்

பத்து நிமிஷமாவது வணங்குங்கள்

பத்து நிமிஷமாவது வணங்குங்கள்

ADDED : அக் 11, 2010 07:10 PM


Google News
Latest Tamil News
* கடவுள் நமக்கு உடல் கொடுத்ததோடு

மட்டுமல்லாமல் இப்பரந்த உலகம்,

தேவையான உணவு, உடை ஆகியவற்றையும் தந்திருக்கிறார். அதனால், நாள்தோறும் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும். இதன் அடையாளமாகச் சிலர் உண்பதற்கு முன் கடவுளுக்கு நிவேதனமாக உணவைக்

காட்டியபிறகு சாப்பிடத் துவங்குவர்.

* ஒவ்வொரு வீட்டிலும் மாலை நேரத்தில் விளக்கேற்றி, பத்து நிமிஷ நேரமாவது இஷ்ட தெய்வத்தின் மீது பஜனை செய்ய வேண்டும். வீட்டில் செய்யும் வழிபாடு நிலையான இன்பத்தை தரவல்லது.

* இறைவனிடம் எதை எதையோ வேண்டுகிறோம்.

உண்மையில் வேண்டுவதாக இருந்தால், மனம்

கண்டபடி அலையாமல், வைராக்கியத்தைக் கேட்டுப் பெறவேண்டும். அப்போது தான் மனம் திருந்தி

புத்தியின் வழியில் செல்லும்.

* நாம் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் தப்பில்லை. ஆனால், எல்லா தெய்வங்களும் ஒன்றே என்று புரிந்து கொண்டு வழிபடவேண்டும் என்பது தான் மிகவும்

முக்கியம்.

காஞ்சிப்பெரியவர்  





      Our Apps Available On




      Dinamalar

      Follow us