Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/மாளிகையில் வாழலாம்

மாளிகையில் வாழலாம்

மாளிகையில் வாழலாம்

மாளிகையில் வாழலாம்

ADDED : பிப் 10, 2014 02:02 PM


Google News
Latest Tamil News
* சிறியவர் என்று யாரையும் அலட்சியமாக நினைக்கக் கூடாது. உயர்ந்த அரிசி, எளிய உமியின் துணை கொண்டே, சாதாரண மண்ணில் முளை விடுகிறது.

* ஒருவன் தன்னைக் காக்க விரும்பினால், முதலில் சினம் காக்க வேண்டும்.

* மற்றவர்களுடைய பொருளை கவர்ந்து கொள்ள கனவிலும் நினைக்கக் கூடாது.

* நியாயம் அல்லாத வழி சேர்ந்த பொருள் நிலைப்பது இல்லை. உழைத்து உண்ணும் வாழ்க்கையே உயர்ந்தது.

* போதும் என்ற மனதுடன் வாழ்பவனே, மகிழ்ச்சி என்னும் மாளிகையில் நுழையும் தகுதி பெறுகிறான்.

- வாரியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us