Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/நம்பியவரைக் கைவிடாதீர்!

நம்பியவரைக் கைவிடாதீர்!

நம்பியவரைக் கைவிடாதீர்!

நம்பியவரைக் கைவிடாதீர்!

ADDED : ஆக 31, 2011 09:08 AM


Google News
Latest Tamil News
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்பதைத் தான் இறைவன் கவனிக்கிறான்.

* மெய்யாக உங்கள் கையிலுள்ள பொருள்கள் பரிசுத்தமடைவதற்காகவே அல்லாமல், இறைவன் உங்கள் மீது ஜகாத்தைக் கடமையாக்கவில்லை.

* ஒரு மனிதன் தன்னுடையவர்களிடத்தில் ஒழுக்கமாக நடந்து கொள்ளுதலே, அவர்களை ஒழுக்கமாக நடந்து கொள்ளச் செய்தலாகும்.

* தன் பிள்ளைகளைப் பிறர் நல்லவிதமாக நடத்த வேண்டும் என்று விரும்புகின்றனர், அநாதைப் பிள்ளைகளை நல்ல விதமாக நடத்தட்டும்.

* உங்களை நம்பி ஒருவன் ஒரு செய்தியைச் சொன்னால் அதை அடைக்கலப் பொருளைப் போல் பாதுகாத்து வையுங்கள்.

* தர்மம் செய்ய இயலாதவன் ஒரு நற்செயல் செய்வானாக. அல்லது ஒரு கெட்ட செயலிலிருந்து விலகிக் கொள்வானாக. அதுவே அவனது ஈகை.

- நபிகள் நாயகம்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us