Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/எல்லாரிடமும் அன்பு காட்டுக!

எல்லாரிடமும் அன்பு காட்டுக!

எல்லாரிடமும் அன்பு காட்டுக!

எல்லாரிடமும் அன்பு காட்டுக!

ADDED : ஜூலை 09, 2012 04:07 PM


Google News
Latest Tamil News
* படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பம். படைப்புகளுக்கு நன்மை புரிபவரே இறைநேசத்திற்கு உரியவர்.

* நீங்கள் அன்பு செலுத்தாதவரை இறைநம்பிக்கையாளராக முடியாது. அன்பு என்பது உங்கள் உறவினர் மீது மட்டும் செலுத்தப்படுவது அல்ல. அன்பு அனைவர் மீதும் செலுத்தப்படுவதாகும்.

* இறைநம்பிக்கையாளன் நேசத்தின் சிகரமாவான். மக்களை நேசிக்காதவனிடமும், மக்களால் நேசிக்கப்படாதவனிடமும் எந்த நன்மையும் இல்லை.

* உங்களுக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்பாத வரையில் நீங்கள் உண்மையுள்ள இறை நம்பிக்கையாளர் ஆக முடியாது.

* நெருப்பைத் தண்ணீர் அணைத்து விடுவது போல செய்கின்ற தர்மம் பாவங்களை அழித்து விடுகின்றது.

* இறைவனிடம் பாவமன்னிப்பைக் கோருங்கள். நான் ஒரு நாளைக்கு நூறுமுறை மன்னிப்பைக் கோருகிறேன். ஒருவன் குர்ஆனை மனனம் செய்து மறந்துவிடுவது பாவத்தின் காரணமே.

- நபிகள் நாயகம்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us