Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/யாரை சொர்க்கம் தேடுகிறது?

யாரை சொர்க்கம் தேடுகிறது?

யாரை சொர்க்கம் தேடுகிறது?

யாரை சொர்க்கம் தேடுகிறது?

ADDED : ஜூலை 19, 2013 10:07 AM


Google News
Latest Tamil News
* ஒரு அனாதை அழுகின்ற சமயம், அவன் அழுவதற்கு காரணமானவனுக் காக நரகம் விரிவடைகிறது. அவனை சிரிக்க வைப்போருக்காக சொர்க்கம் விரிவடைகின்றது என்று இறைவன் கூறுகின்றான்.

* மோசடி செய்பவன், கஞ்சன், கொடுத்த தர்மத்தைச் சொல்லிக்காட்டுபவன் ஆகியோர் சொர்க்கம் நுழையமாட்டார்கள்.

* உங்களைப் படைத்த இறைவனை நேசிக்கிறீர்களா? முதலில் உங்களைப் போன்ற மனிதர்களை நேசியுங்கள்! அப்பொழுது தான் உங்களுக்கு இறைவன் நேசம் கிடைக்கும்.

* ஒரு மனிதனைப் பற்றி விசாரிக்காதீர். அவனுடைய நண்பனை தெரிந்து கொள்ளுங்கள்! ஏனென்றால் ஒவ்வொருவரும் தனது நண்பனைத் தான் பின்பற்றுவான்.

* இவர்களை சொர்க்கம் தேடுகிறது. 1. திருக்குர்ஆனை ஓதுபவர், 2. தேவையற்ற பேச்சை பேசாமல் தம் நாவை பேணுபவர், 3. பசித்தவர்களுக்கு <உணவளிப்பவர், 4. ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றவர்.

- நபிகள் நாயகம்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us