Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/முடிந்த உதவியைச் செய்

முடிந்த உதவியைச் செய்

முடிந்த உதவியைச் செய்

முடிந்த உதவியைச் செய்

ADDED : டிச 23, 2011 09:12 AM


Google News
Latest Tamil News
* மகிழ்ச்சி மனிதனுக்குள்ளேயே இருப்பது தானே தவிர, வெளியிலுள்ள பொருள்களினால் ஏற்படுவதில்லை. உண்மையான அனுபவத்தின் வெளிப்பாடாக மலர்வது மகிழ்ச்சி.

* வாக்காலும், மனத்தாலும், உடலாலும் சமுதாயத்திற்கு முடிந்த உதவியை செய்வதுடன், நம்மைச் சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் உயர்த்த வேண்டும்.

* உணவுக் கட்டுப்பாடு, குறைந்த அளவிலான சத்துணவு போன்றவை மனதை தூய்மையாக வைக்க உதவும் நல்ல வழி.

* தவறான செயலை செய்துவிட்டு, அறியாமையால் அதை மறைக்கக்கூடாது. குற்றங்களைச் செய்யும் பழக்கத்தை விட்டுவிட்டு நல்ல ஒழுக்கத்துடன் வாழப் பழக வேண்டும்.

* காந்த ஊசி எப்போதும் வடக்கு திசை நோக்கி இருப்பது போல, ஈசனைப் போற்றுபவர்கள் அவரது நினைவாகவே இருப்பர். ஆசையால் வழிதவறி நடப்பதில்லை.

- ரமணர்
இன்று ரமணர் அவதார நாள்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us