"நம்பிக்கை இருக்கு...!' மாற்றுத் திறனாளிகளுக்கான படம் எடுக் கும் மாற்றுத் திறனாளி பாத்திமா: திருப்பரங் குன்றம் தான் என் சொந்த ஊர்.
என் தோட்டம் தான் மெடிக்கல் ஷாப்: வீட்டில் தோட்டம் வைத்து பராமரிக்கும் அருள் மொழி: என் அப்பா விவசாயத் துறையில் இருந்தவர். அவர் தான் இந்த செடி வளர்ப்பிற்கு ரோல் மாடல். எனக்குச் சின்ன வயசுல உடம்பு சரியில்லாம போனா, மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போக மாட்டாரு. வீட்டுல இருக்கற மூலிகை செடிகள்ல இருந்து தான் மருந்து எடுத்துக் கொடுப்பார். அதுலயே சரியாயிடும். அவர் சொல்லிக் கொடுத்த நல்ல பழக் கம் தான் இன்று வரை தினமும் காலையில் தோட்டத்துல இருந்து இரண்டு துளசி இலையைப் பறிச்சு நான் வாயில போட்டுக்கறதுக்கு காரணம். நான் திருமணம் முடிஞ்சு புகுந்த வீடு வந்த வீட்டுலயும் தோட்டம் போட் டேன். இப்பவும் எங்க அப்பா என்னைப் பார்க்க வரும் போது, ஏதாவது புது வகையான இரண்டு நர்சரி செடிகள் வாங்கிட்டு தான் வருவார். என் தோட்டத்துல இருக்கற பல செடிகள் அப்பா வாங்கி கொடுத்தது தான். எங்க வீட்டுல பெரும்பாலும் மூலிகை செடிகள் தான் அதிகம் இருக்கும். அதை தோட்டம்னு சொல்ற தை விட மெடிக்கல் ஷாப், காய்கறி மார்க் கெட்ன்னு தான் சொல்லணும். எங்க வீட்டு தோட் டத்துல ரத்த அழுத் தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும் "கோளியஸ் கிழங்கு செடி' பல மருந்துகள் தயாரிக்க பயன்படும் கண்வலிகிழங்குச் செடி, பாம்பு கடிக்கு முதலுதவி சிகிச்சை தர உதவும் சிறியா நங்கை உட்பட பல மூலிகை செடிகளும், சிறு கீரை, தக்காளி, கத்தரிக்காய் உட்பட பல காய்கறி செடிகளும் இருக்கு. இப்ப நானும் என் பிள்ளைகளுக்கு ஏதாச்சும்னா உடனே மருத்துவமனைக்கு ஓடாம, என் தோட்டத் தில் இருக்கற செடிகளை வெச்சு கை வைத்தியம் பார்த்துக்கறேன். விடுமுறை நாட்கள்ல எங்க குடும் பத்துல எல்லாரும் இந்த தோட்டத்துல இருப்போம். அவ்ளோ குளுமையா, இருக்கும்.