Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/உங்களின் முதல்வேலை

உங்களின் முதல்வேலை

உங்களின் முதல்வேலை

உங்களின் முதல்வேலை

ADDED : செப் 15, 2011 08:09 AM


Google News
Latest Tamil News
* பிள்ளையின் செயலைக் கண்டு எந்தத் தாயும் கண்ணீர் சிந்தக்கூடாது. அப்படி சிந்தினால் அது உங்களுக்கு நல்லதல்ல. அதன் காரணமாக நீங்கள் எதிர்காலத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும்.

* நம்பிக்கை அற்புதங்களைச் செய்யும். கடவுள் எதைக் கொடுப்பார் என நீ நம்புகிறாயோ அது ஒருநாள் உன்னிடம் வந்தே தீரும். ஒரு செயலைத் தொடங்கும் முன் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை உங்களிடமே

நம்பிக்கையூட்டிக் கொள்வது தான்.

* மனிதனுக்குச் செய்யும் தொண்டு கடவுள் பக்தியை விட மேலானது. கடவுளுக்கு உன்னால் ஆக வேண்டிய தேவை எதுவுமில்லை. மனிதனுக்குச் சேவை செய்பவன் கடவுளை மகிழ்ச்சிப்படுத்தியவன் ஆவான்.

* இரவில் குளிர் அதிகரிக்கும்போது உன்னைச் சுற்றி இழுத்துப் போர்த்திக் கொள்ளுகிறாய். அதுபோலத் துன்பம் உன்னைத் தாக்கும்போது உன் மனதைச் சுற்றிக் கடவுள் திருநாமத்தின் கதகதப்பை அமைத்துக் கொள்வாயாக.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us