Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வள்ளலார்/நல்லதை உடனே செய்க!

நல்லதை உடனே செய்க!

நல்லதை உடனே செய்க!

நல்லதை உடனே செய்க!

ADDED : செப் 11, 2013 10:09 AM


Google News
Latest Tamil News
* கடவுளை வழிபட வாத்தியம் எதுவும் தேவையில்லை. நெகிழ்ச்சியோடு உள்ளம் உருகி அழும் கண்ணீரே மேலான வழிபாடு.

* கடவுள் ஒரு கற்பனைப் பொருள் அல்ல. ஒவ்வொருவரும் என்றாவது ஒருநாள் அடைய வேண்டிய சத்தியப்பொருள்.

* மனிதப் பிறவி நமக்கு வாய்த்திருக்கிறது. அதைக் கொண்டு நல்ல செயல்களை உரிய நேரத்தில் செய்து முடிக்க வேண்டியது நம் கடமை.

* கடவுளுக்கு செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதை ஏழைகளுக்காக செலவழியுங்கள்.

* கடவுளை சரணடைந்தால் ஒழிய பொய், பொறாமை போன்ற தீய பண்புகள் நம்மை விட்டு நீங்காது.

* ஜீவகாருண்யத்துடன் எல்லா உயிர்களையும் நேசித்து வாழ்வதே பேரின்ப வீட்டின் திறவுகோல்.

* பகட்டாக உடை உடுத்துவதும், ஆடம்பரமாக நடப்பதும் ஆன்மிக வாழ்விற்குப் புறம்பான செயல்கள்.

- வள்ளலார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us