Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/இறைவனை மட்டுமே சார்ந்திரு!

இறைவனை மட்டுமே சார்ந்திரு!

இறைவனை மட்டுமே சார்ந்திரு!

இறைவனை மட்டுமே சார்ந்திரு!

ADDED : ஜன 20, 2011 11:01 PM


Google News
Latest Tamil News
* மனிதத் துணை அனைத்தையும் விட இறைவன் எல்லையற்ற பெருமையை உடையவனாகிறான். இறைவனிடம்

நம்பிக்கை கொள். அவரையே எப்போதும் சார்ந்திரு; அப்போது நன்னெறியில் செல்வாய். எதனாலும் உன்னை வெல்ல முடியாது.

* இறைவனது தொண்டர்களுக்குத் தொண்டு செய்பவர்கள் அவரது உத்தமத் தொண்டர்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

* பொருளாதார மதிப்பு இருக்கின்ற மதமே வெற்றி பெறும். ஆயிரக்கணக்கான ஒரே விதமதப் பிரிவுகள் ஆதிக்கத்திற்குப் பாடுபடலாம். ஆனால், பொருளாதாரப் பிரச்னையைத் தீர்ப்பவைகளே ஆதிக்கத்தைப் பெறுகின்றன.

* ஒரு லட்சிய மதத்தின் நோக்கம் இவ்வுலக வாழ்விற்கும் உதவ வேண்டும். மறு உலகிற்கும் வழிகாட்ட வேண்டும். அதே வேளையில், இறப்பையும் ஏற்க அது ஒருவனை ஆயத்தம் செய்யவும் வேண்டும்.

* மதத்தைப் பற்றிக் கொண்டு சண்டையில் இறங்காதே, மதச் சண்டைகளும் வாதங்களும் அறிவின்மையின் அறிகுறி. தூய்மையும். அறிவும் வெளியேறி இதயம் வறளும் போது தான் சண்டைகள் தொடங்கும்; அதற்கு முன்னால் அல்ல.

- விவேகானந்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us