Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/கடமையும் விளையாட்டு தான்!

கடமையும் விளையாட்டு தான்!

கடமையும் விளையாட்டு தான்!

கடமையும் விளையாட்டு தான்!

ADDED : ஜூலை 31, 2012 11:07 AM


Google News
Latest Tamil News
* கோபத்தில் மனிதன் பலருக்கும் அநீதி இழைக்கிறான். நியாயமான கோபம் என்றே ஒன்று கிடையாது. உலகம் அனைத்தையும் சமமாகக் காணத் தவறும்போது தான் கோபமே உண்டாகிறது.

* பயமின்றி இருப்பதே வாழ்வின் ரகசியம். என்ன நேருமோ என்று ஒருபோதும் கலங்கி நிற்பது கூடாது. ஒருவரையும் சார்ந்து இருக்க கூடாது. பிறரிடமிருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்காத போது தான் சுதந்திரத்தை உணர முடியும்.

* சுயநலமில்லாமல் தன்னை மறந்த நிலையில் தான் மனிதன் மிக மேலான மகிழ்ச்சியைப் பெற முடியும்.

* பரபரப்பு, பதட்டத்துடன் செயல்படாதீர்கள். சுதந்திர உணர்வுடன் பணியாற்றுங்கள். இந்த உலகம் வெறும் பயிற்சிக்கூடம். அதில் நாம் விளையாடுகிறோம் அவ்வளவு தான்.

* மனம் ஆசையை வளர்த்துக் கொண்டு சஞ்சலப்படுகிறது. கடலில் அலை எழுவது போல ஆசை எப்போதும் மனக்கடலில் எழுந்தபடி இருக்கிறது.

* ஆசை என்பது தங்கமுலாம் பூசியிருக்கும் விஷ உருண்டை என்பதை உணர்ந்து கொள்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us