Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/எல்லாரிடமும் அன்பு கொள்க!

எல்லாரிடமும் அன்பு கொள்க!

எல்லாரிடமும் அன்பு கொள்க!

எல்லாரிடமும் அன்பு கொள்க!

ADDED : நவ 30, 2012 05:11 PM


Google News
Latest Tamil News
* முதலில் ஒன்றைக் கேளுங்கள். பிறகு புரிந்து கொள்ளுங்கள். பின், எல்லா சஞ்சலங்களையும் விட்டு, புறஆதிக்கம் எதுவும் அணுகாதபடி மனதை மூடி வையுங்கள். அப்போது உள்ளத்திற்குள் உண்மை என்னும் பிரகாசம் ஒளிர்வதை உணர்வீர்கள்.

* பயமும், நிறைவேறாத ஆசைகளுமே எல்லாத் துன்பங்களுக்கும் காரணம். தனக்கு மரணமில்லை என்பதை அறியும்போது தான் இந்த பய உணர்வு நம்மை விட்டு அகலும்.

* மனிதன் கைம்மாறு கிடைக்கும் இடத்தில் மட்டுமே அன்பு காட்டுகிறான். எல்லாரிடமும் அன்பு காட்டுவதே முறையானது.

* ஆன்மிக நெறியில் பக்குவப்பட்ட மனிதர்கள் கைம்மாறு கருதாமல் அன்பை வெளிப்படுத்துவர். அவர்கள் கடவுளின் அருளைப் பெறும் தகுதியைப் பெறுகிறார்கள்.

* பற்றற்ற மனப்பான்மையை நீங்கள் பெற்றுவிட்டால் உங்களை நன்மையோ, தீமையோ எதுவும் நெருங்க முடியாது. சுயநலமே நன்மை, தீமை என்ற வேறுபாட்டை உருவாக்குகிறது.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us