Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/அன்பே உலகில் உயர்ந்தது

அன்பே உலகில் உயர்ந்தது

அன்பே உலகில் உயர்ந்தது

அன்பே உலகில் உயர்ந்தது

ADDED : ஜூன் 29, 2012 11:06 AM


Google News
Latest Tamil News
* பிறருக்கு உதவுவது என்பது நம்மை நாம் பண்படுத்திக் கொள்வதற்காக தரப்படுகின்ற வாய்ப்பு என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

* இறைவன் ஒரு பெரிய காந்தக் கல்லினை போல இருக்கிறார். நாமெல்லாம் இரும்பு துகள்களைப் போல அவரால் எப்போதும் கவரப்பட்டு இருக்கிறோம்.

* வாழ்வில் ஏற்படும் கொடிய போராட்டங்கள், கொந்தளிப்புகள் அனைத்தும், முடிவில் இறைவனை அடைந்து அவருடன் ஒன்று கலப்பதற்காகவே.

* எண்ணத்தையும், புத்தியையும், ஆராய்ச்சி மனப்பான்மையையும் கடக்கும்போது தான் கடவுளை நோக்கி முதல் அடியை எடுத்து வைக்கிறீர்கள்.

* தன்னலம், கணக்குப் பார்த்தல், பேரம்பேசுதல், அர்த்தமற்ற பயம் போன்றவற்றில் இருந்து கடந்து வந்தவனால் மட்டுமே முழுமையான பக்தி செலுத்த முடியும்.

* அன்பே உலகை அரவணைத்துச் செல்லும் உயர்ந்த குணம். அன்பு நிறைந்திருக்குமிடத்தில் குறுகிய சிந்தனைகள் உண்டாவதில்லை.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us