Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/மனச்சுத்தம் மிக அவசியம்

மனச்சுத்தம் மிக அவசியம்

மனச்சுத்தம் மிக அவசியம்

மனச்சுத்தம் மிக அவசியம்

ADDED : ஜூன் 12, 2012 09:06 AM


Google News
Latest Tamil News
* ஒரு செயலின் பயனில் கருத்து செலுத்துவது போல, அதைச் செய்யும் முறையிலும் கருத்தைச் செலுத்துங்கள்.

* உலகிற்கு நன்மை செய்யும் ஒவ்வொரு முறையும் நமக்கு நாமே நன்மை செய்து கொள்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

* மனத்தூய்மையுடன் இருப்பதும், மற்றவர்களுக்கு நன்மை செய்வதுமே வழிபாட்டின் சாரம்.

* ஏழை,பலவீனர்கள், நோயாளிகளிடம் இறைவனைக் காண்பவனே உண்மையான பக்தன்.

* எப்போதும் உற்சாகத்துடன் இருப்பது தான் ஆன்மிக வாழ்வில் ஈடுபடுவதற்கான முதல் அறிகுறி.

* உயர்ந்த எண்ணத்தைச் சிந்திக்கும் மனிதனால் அற்பமான விஷயங்களில் ஆர்வம் ஏற்படுவது இல்லை.

* அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில் எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழும்போது உள்ளம் சொல்வதையே பின்பற்றுங்கள்.

* நல்லொழுக்கத்தால் தெய்வீக உணர்வும், தீயொழுக்கத்தால் மிருக உணர்வும் ஏற்படுகிறது.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us