Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/பணம் மட்டுமே வாழ்வல்ல!

பணம் மட்டுமே வாழ்வல்ல!

பணம் மட்டுமே வாழ்வல்ல!

பணம் மட்டுமே வாழ்வல்ல!

ADDED : செப் 11, 2012 09:09 AM


Google News
Latest Tamil News
* செல்வம் பெருகியுள்ள காலத்தில் தான் ஒருவனுக்கு பணிவு தேவை. அதே சமயம் வறுமையுற்ற காலத்தில் மனிதனுக்கு துணிவு அவசியம்.

* தன்னந்தனியாக இருப்பவன் பகையைத் தேடிக் கொள்ளக்கூடாது. அவ்வாறு செய்தால் பித்துப்பிடித்தவனைப் போல அலைய நேரிடும்.

* துன்பமற்ற இன்பமும், தீமையற்ற நன்மையும் அடைவது என்பது இயலாத ஒன்று. எந்தச் செயலிலும் இன்ப, துன்பம் இரண்டும் கலந்தே இருக்கிறது.

* நன்மை செய்பவன், ஒவ்வொருவருக்கும் கைகொடுத்து மகிழத் தயாராயிருக்கலாம்.

* பணம் மட்டுமே வாழ்க்கையல்ல. பணத்தை தவிர, நாம் பிறருக்குச் செய்யும் நன்மையும், தெய்வபக்தியும் நம் மனதில் ஆற்றலை பெருகச் செய்பவை தான்.

* மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து நடப்பவன் சத்தியத்தைப் பின்பற்ற முடியாது.

* அரிய செயல்கள் பெரிய உழைப்பின்றி ஒருபோதும் முடிந்ததில்லை.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us