Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/ஒருபோதும் பயம் கூடாது

ஒருபோதும் பயம் கூடாது

ஒருபோதும் பயம் கூடாது

ஒருபோதும் பயம் கூடாது

ADDED : ஆக 30, 2012 02:08 PM


Google News
Latest Tamil News
* உங்கள் உடல், மனம், அறிவு இம்மூன்றையும் பலவீனமாக்கும் எதையும் நஞ்சென்று ஒதுக்கி விடுங்கள். அவற்றை மனதிற்குள் திணிக்காதீர்கள்.

* வஞ்சனையால் எதையும் சாதிக்க முடியாது. அன்பாலும், உண்மையாலும் பெரிய செயலைக் கூட எளிதாகச் செய்து விட முடியும்.

* பரந்த உலகில் பிறந்த நீங்கள், அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லாவிட்டால், உங்களுக்கும் கல்லுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

* பயமின்மையே வாழ்வின் ரகசியம். நமக்கு என்ன நேருமோ என்று ஒருபோதும் பயப்படவேண்டாம். பிறரிடம் இருந்து வரும் உதவியை மறுக்கின்ற அந்த கணமே சுதந்திரம் வந்துவிடும்.

* நியாயமான கோபம் என்ற ஒன்று உலகில் இல்லை. ஏனெனில், அனைத்தையும் சமமாகக் காணத் தவறுவதால் தான் கோபமே உண்டாகிறது.

* எண்ணங்களுக்கு நாம் உரிமை உடையவர்கள். நல்ல எண்ணங்கள் நம்மை நோக்கி வருவதற்காக உள்ளங்களைத் திறந்து வைக்க வேண்டியது நம் கடமை.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us