Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/எது செய்தாலும் பலன் நமக்கே!

எது செய்தாலும் பலன் நமக்கே!

எது செய்தாலும் பலன் நமக்கே!

எது செய்தாலும் பலன் நமக்கே!

ADDED : பிப் 04, 2011 12:02 AM


Google News
Latest Tamil News
* கடவுள் பிரம்மாண்டமான பெரிய வட்டம் போன்றவர். அந்த வட்டத்தின் மையம்,

எங்கும் எல்லா இடங்களிலும் அமைந்து

இருக்கிறது. அந்த மையம் தான் மனிதன்.

* நம்முடைய தெய்வீக இயல்பை வெளிப்

படுத்த ஒரே வழி, மற்றவர்கள் தங்கள்

தெய்வீக இயல்பை வெளிப்படுத்தும்படி அவர்களுக்கு உதவி செய்வது தான்.

* கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை. இந்த உண்மையை எவ்வளவோ தவங்களுக்குப் பிறகு நான் புரிந்து கொண்டிருக்கிறேன். மக்களுக்குச் சேவை

செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை

செய்பவனாகிறான்.

* தன்னலமற்ற மனப்பான்மை தான் ஆன்மிக வாழ்வின் அடிப்படை. இதை கொண்டே ஒருவரின் ஆன்மிகத்

தேடுதலை சோதிக்க வேண்டும். சுயநலம்

இல்லாதவனே, ஆன்மிக வாழ்க்கையைப்

பெற்றவனாகிறான்.

* தீமையைச் செய்வதனால் நாம் நமக்கும் மற்றவர்

களுக்கும் தீமை செய்கிறோம். நன்மையைச்

செய்வதனால், நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்து கொள்கிறோம்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us