உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / போகிற போக்கில் கதைகளை தேர்ந்தெடுக்காதீர்கள் ; மிருணாள் தாக்கூருக்கு 'கல்கி' இயக்குனர் வேண்டுகோள்

போகிற போக்கில் கதைகளை தேர்ந்தெடுக்காதீர்கள் ; மிருணாள் தாக்கூருக்கு 'கல்கி' இயக்குனர் வேண்டுகோள்


தெலுங்கில் வெளியான 'சீதாராமம்' படத்தில் கதாநாயகியாக நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர். தொடர்ந்து தெலுங்கில் வெற்றி படங்களில் இடம்பெற்று வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கில் வெளியான 'டகாய்ட்' படத்தில் மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக 'கல்கி' பட இயக்குனர் நாக் அஸ்வின் கலந்து கொண்டார். அப்போது அவர் மிருணாள் தாக்கூர் குறித்து பாராட்டி பேசியதுடன் தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தினார்.

இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, “மிருணாள்.. நீங்கள் உண்மையிலேயே அற்புதமானவர்.. ஆனால் சில நேரங்களில் ஏன் நீங்கள் அவ்வளவு தாக்கம் இல்லாத கதாபாத்திரங்களை செய்கின்றீர்கள் என்று எனக்கு ஆச்சரியம் ஏற்படும். நீங்கள் இன்னும் அதிக வலுவான கதாபாத்திரங்களுக்கு தகுதியானவர். அது எந்த கதாபாத்திரம் என்றாலும் கூட அந்த கதாபாத்திரத்தின் ஆழத்தை உணர்ந்து அது வருத்தமோ அல்லது வலியோ அதை நீங்கள் வெளிப்படுத்தும் விதத்தில் மதுபாலா, ஸ்மிதா பாட்டில் ஆகியோரின் நீட்சியாகவே உங்களை பார்க்கிறேன். அதனால் தயவு செய்து போகிற போக்கில் கதைகளை தேர்ந்தெடுக்காதீர்கள். நல்ல வலுவான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுங்கள்” என்று கூற, அவரது பேச்சில் நெகிழ்ந்து போன மிருணாள் தாக்கூர் அதை ஆமோதித்து தலையசைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !