உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கதை நாயகன் ஆனார் ரவி மரியா படத்தில் ஏகப்பட்ட அரசியல்வாதிகள்

கதை நாயகன் ஆனார் ரவி மரியா படத்தில் ஏகப்பட்ட அரசியல்வாதிகள்

ஜீவா நடித்த ஆசை, ஆசையாய் படத்தின்மூலம் இயக்குனர் ஆனவர் ரவி மரியா, நட்டி நடித்த மிளகா உள்ளிட்ட படங்களை இயக்கியவர். பின்னர், நகைச்சுவை, குணசித்திர நடிகர் ஆனார். ரவிமரியா காமெடியனாக நடித்த படங்களில் தேசிங்கு ராஜா, வேலைன்னு வந்திட்டா வெள்ளக்காரன் உள்ளிட்ட படங்கள் பேசப்பட்டன. இப்போது அவரும் கதைநாயகன் ஆகிவிட்டார்.

ராம்தேவ் இயக்கும் மக்கள் தலைவா படத்தில் அரசியல்வாதியாக, கதைநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் எப்படி முதல்வர் ஆகிறார். அவருக்கு ராதாரவி எப்படி உதவி செய்கிறார் என்ற பாணியில் கதை நகர்கிறதாம்.

அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட படம், அரசியல் பிரச்னை வரக்கூடாது என்பதற்காக அரசியல்வாதிகளாக இருக்கும் நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா, பேரரசு ஆகியோரை படத்தில் நடிக்க வைத்து இருக்கிறார்களாம். கதையில் ஏகப்பட்ட வில்லங்கம் இருக்கிறது. டயலாக்கில் நிறைய பஞ்சாயத்து இருக்கிறது. கண்டிப்பாக, இந்த படத்துக்காக வழக்கு வரும் என ராதாரவி ஓபனாக பேசியுள்ளார். ரவி மரியாவும் அதிமுகவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !