உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆர்த்தியின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் : குழந்தைகளை சந்திக்க ரவி மோகனுக்கு அனுமதி

ஆர்த்தியின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் : குழந்தைகளை சந்திக்க ரவி மோகனுக்கு அனுமதி

கடந்த 2009ல் நடிகர் ரவி மோகன் தனது நீண்டநாள் தோழியான ஆர்த்தியை காதல் திருமணம் செய்து கொண்டார். 15 வருட குடும்ப வாழ்க்கைக்கு பிறகு கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் விவாகரத்துக்கு விண்ணப்பித்து பிரிந்து வாழ்கின்றனர். இந்த விவாகரத்து நிலுவையில் இருக்கும் நாட்களில் தனக்கும் குழந்தைகளுக்கும் மாதந்தோறும் 40 லட்சம் இடைக்கால ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என ஆர்த்தி குடும்ப நல நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்திருந்தார்.

தற்போது அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அதேசமயம் ஆர்த்திக்கு மாதந்தோறும் மூன்று லட்சம் இடைக்கால ஜீவனாம்சமாக ரவி மோகன் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்ல தனது குழந்தைகளை சந்திக்க விட ஆர்த்தி மறுக்கிறார் என்றும் அவர்கள் விபத்தில் சிக்கிய தகவல் கூட தனக்கு தாமதமாகத் தான் தெரிய வந்தது என்றும், தன் குழந்தைகளைப் பார்க்க அனுமதிக்கும்படி ரவி மோகன் வைத்த கோரிக்கையையும் ஏற்று, தன் குழந்தைகளை பார்ப்பதற்கு ரவிமோகன் அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !