Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/ அடுத்தது ஜெகனா?

 அடுத்தது ஜெகனா?

 அடுத்தது ஜெகனா?


PUBLISHED ON : மே 07, 2026 01:53 AM

Follow on Google

PUBLISHED ON : மே 07, 2026 01:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த பிரச்னை யும் இல்லாமல் நிம்மதியாக இருந்தேன்; இப்போது பிரச்னை ஆரம்பித்து விட்டது...' என, பயத்தில் புலம்புகிறார், ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி.

ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்தபோது, அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடு மீது, பல்வேறு வழக்குகளை பதிவு செய்து தொல்லை கொடுத்தார்.

திறன் மேம்பாட்டு திட்ட நிதியை தவறாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கில், சந்திரபாபு நாயுடுவை கைது செய்து, நீண்ட நாட்கள் சிறையில் அடைத்து அலைக்கழித்தார், ஜெகன்மோகன் ரெட்டி.

கடந்த, 2024ல் நடந்த சட்டசபை தேர்தலில், சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்று, முதல்வராக பதவியேற்றார். இரண்டு ஆண்டுகளாக அமைதியாக இருந்த சந்திரபாபு நாயுடு, தற்போது தன் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

ஜெகன்மோகன் ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க, போலீசில் தனி குழுவை அமைத்துள்ளார். ஜெகனின் வலது கரமாக செயல்பட்டு வந்த ஸ்ரீஹரி என்பவர், முதல்வரை அவதுாறாக பேசிய வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையறிந்த ஜெகன்மோகன், 'சந்திரபாபு நாயுடு, தன் வேலையை காட்டத் துவங்கி விட்டார். அடுத்ததாக, என்னைத் தான் கைது செய்வார்...' என, புலம்புகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us