கூச்சலிட்டபடி சென்றதால் த.வெ.க.,வினர் கார் பறிமுதல்
கூச்சலிட்டபடி சென்றதால் த.வெ.க.,வினர் கார் பறிமுதல்
ADDED : மே 07, 2026 05:34 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில், புது பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் காரில் தொங்கியபடி, தேர்தலில் த.வெ.க., வெற்றியை கொண்டாடிய , 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, காரை பறிமுதல் செய்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலில், த.வெ.க., வெற்றி பெற்று முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளதால், அக்கட்சியை சேர்ந்தவர்கள் ராமநாதபுரத்தில்ஆரவாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் மதியம் 1:30 முதல் மாலை 6:00 மணி வரை, ஒரு காரில் தொங்கியபடி, 12 வாலிபர்கள் புது பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் அலுவலக வளாகம், ராமேஸ்வரம் ரோட்டில் விசில் அடித்து கூச்சலிட்டு சென்றனர்.
இதனால், போக்குவரத்திற்கு இடையூறு மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக, கேணிக்கரை எஸ்.ஐ., திருமுருகன் புகாரில், ராமநாதபுரத்தை சேர்ந்த 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, காரை பறிமுதல் செய்தனர்.
