ஜெயகுமார் சவாலை தி.மு.க., ஏற்கலாமே!
ஜெயகுமார் சவாலை தி.மு.க., ஏற்கலாமே!
ஜெயகுமார் சவாலை தி.மு.க., ஏற்கலாமே!
விஜயகாந்துக்கு முதல்வர் தந்த மரியாதை!
கே.விக்னேஷ்,
ராமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: சமீபத்தில், தே.மு.தி.க., தலைவரும், நடிகருமான விஜயகாந்த்,
உடல்நலக் குறைவால் காலமானார். போலித்தனம் இல்லாத, கள்ளம், கபடமற்ற இயல்பான
தன் குணத்திற்காகவும், தன்னலம் கருதாத கொடைத் தன்மைக்காகவும், அவர் எவ்வளவு
இதயங்களை வென்றுள்ளார் என்பதற்கு, அவருக்கு இறுதி மரியாதை செலுத்த, கூடிய
கூட்டமே சாட்சி.
நீதி துறை மீது நம்பிக்கை போய் விடும்!
அ.குணசேகரன்,
வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: 'தினமலர்' நாளிதழில் சமீபத்தில் வெளியான, 'நீதிபதி காலி
பணியிடங்கள் விரைந்து நிரப்புவது அவசியம்' தலையங்கம் படித்தேன். அதில்,
நாடு முழுதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் 4.4 கோடி, உயர் நீதிமன்றங்களில்
61.70 லட்சம், உச்ச நீதிமன்றத்தில் 79,593 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக
கூறியது வருத்தம் அளிக்கிறது.


