PUBLISHED ON : ஏப் 19, 2026 01:00 AM

அ நிறம் | அளவு
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தொகுதி, தி.மு.க., வேட்பாளரான, அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் வெள்ளகோட்டை பகுதியில் சமீபத்தில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'தி.மு.க.,வில் பெண்களுக்கான திட்டங்கள் தான் அதிகம் உள்ளன. மகளிர் உரிமைத்தொகை உங்களுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது; ஆண்களுக்கு இல்லை. அவர்களுக்கு கொடுத்தால், அவர்கள் எந்த கடைக்குச் செல்வர் என்று உங்களுக்குத் தெரியும்' என்றதும், அங்கிருந்த பெண்கள், 'டாஸ்மாக் கடைக்கு செல்வர்' என்று, கோரசாக கூறினர்.
உடனே சுதாரித்துக் கொண்ட அமைச்சர், 'நான் அப்படி சொல்ல வரவில்லை; டீக்கடைக்கு செல்வர் என்று சொல்ல வந்தேன்' என்றார்.
இதை கேட்ட ஆண் தொண்டர் ஒருவர், 'நம்ம மனசு நோகக் கூடாதுன்னு, அமைச்சர் சமாளிக்கிறாருப்பா...' என கூற, சக தொண்டர்கள் சிரித்தனர்.





