தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'அமைச்சர் கவனம் செலுத்தணும்!'

'அமைச்சர் கவனம் செலுத்தணும்!'

'அமைச்சர் கவனம் செலுத்தணும்!'


PUBLISHED ON : செப் 29, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 29, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள்வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் நடந்த, ஊட்டச்சத்துமாத விழாவில், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன்பங்கேற்றார்.

அப்போது பேசுகையில், 'ஒரு குழந்தையின் வளர்ச்சி என்பது, கரு உருவான நாள் முதல் குழந்தைக்கு, 2 வயது முடியும் வரை உள்ளது. கரு உருவாகும்போது, நல்ல சத்தான உணவை தாய் உட்கொண்டால் குழந்தை ஆரோக்கியமாக வளரும். குழந்தை பிறந்ததும், ஆறு மாதம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

'நல்ல சத்தான உணவை தர வேண்டும். பிறகு கீரை, பருப்பு, நெய் சாதம், உருளைக்கிழங்கு, தானிய வகை உணவுகள் அனைத்தும் கொடுத்து வர வேண்டும். 2 வயதில் குழந்தைகளுக்கு, 60 சதவீதம் மூளை வளர்ச்சி அடைந்து விடும்' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'இங்கு பாடம் எடுப்பதுடன்நிறுத்தி விடாமல், சத்துணவு முட்டைகள் கள்ள மார்க்கெட்டில் விற்பனைக்கு போகாம தடுப்பதிலும்அமைச்சர் கவனம் செலுத்தணும்...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us