Dinamalar Logo


தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்

PUBLISHED ON : மார் 22, 2026 12:00 AM


Google News
Latest Tamil News
உலக தண்ணீர் தினம்

உலகில் 210 கோடி பேர் சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். 2030க்குள் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. பாதுகாப்பற்ற குடிநீர், சுத்தமின்மையால் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் தினமும் 1000 பேர் உயிரிழக்கின்றனர். தண்ணீர் அனைத்து உயிரினங்களுக்கும் அவசியம். இது இயற்கை வளங்களில் ஒன்று.

தண்ணீரை சேமித்தல், பாதுகாப்பான தண்ணீர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் மார்ச் 22ல் உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'தண்ணீர் & பாலினம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.