PUBLISHED ON : மே 07, 2026 11:28 PM

அ நிறம் | அளவு
செஞ்சிலுவை சங்க தினம்
போரில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் விதமாக 1919ல் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர்களின் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ஹென்றி துனாத் பிறந்த தினமான மே 8, உலக செஞ்சிலுவை சங்க தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த அமைப்பு மூன்று முறை (1917, 1944, 1963) அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளது.
இரண்டாம் உலகப்போரில் (1939 - 1945) நான்கு கோடி பேர் பலியாகினர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் தினம் ஐ.நா., சார்பில் மே 8ல் கடைபிடிக்கப்படுகிறது.
