PUBLISHED ON : ஆக 14, 2024 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
உலகின் பெரிய இடப்பெயர்வு
இந்தியாவில் இருந்து 1947 ஆக. 14ல் பாகிஸ்தான் பிரிந்தது. இரு நாடுகளில் இருந்தும் மக்கள் இடம் பெயர்ந்தனர். உலகின் மிகப்பெரிய இடப்பெயர்வாக அது அமைந்தது. அப்போது நிகழ்ந்த வன்முறை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பிரிவினையின் வலியை ஒரு போதும் மறக்க முடியாது. நம் மக்களின் போராட்டங்கள், தியாகங்களின் நினைவாக, இனி ஆண்டுதோறும் ஆக. 14ல் பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி 2021ல் அறிவித்தார். அதன்படி இன்று இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
