PUBLISHED ON : நவ 30, 2024 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
ரசாயன ஆயுதங்களுக்கு தடை
உலகில் சில நாடுகளுக்கு இடையே போர் நடக்கிறது. சில நாடுகளில் உள்நாட்டு சண்டை நடக்கிறது. இந்த போர்களில் பயன்படுத்தப்படும் ரசாயன ஆயுதங்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். முதலாம் உலகப்போர் (1914 - 1918) காலத்திலேயே ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போரில் ஒரு லட்சம் பேர் பலியாகினர். எனவே போரில் ரசாயன ஆயுதங்களை தடை செய்ய வலியுறுத்தியும், பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஐ.நா., சார்பில் நவ.30ல் ரசாயன ஆயுதங்களால் பாதிக்கப்பட்டோருக்கான நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.





