Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: நன்றியோடு போற்றுங்கள்!

கவிதைச்சோலை: நன்றியோடு போற்றுங்கள்!

கவிதைச்சோலை: நன்றியோடு போற்றுங்கள்!


PUBLISHED ON : ஏப் 27, 2025

Follow on Google

PUBLISHED ON : ஏப் 27, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மே 1 - உழைப்பாளர் தினம்!

* உழவன் எனும் உழைப்பாளி

நிலமற்றவர்களுக்கும் சேர்த்தே

வியர்வை சிந்தி சேற்றில் பாடுபட்டு

உண்ணச் சோறு போடுகிறான்!

* ஆசிரியர் எனும் உழைப்பாளி

கட்டுப்படாதவர்களுக்கும் சேர்த்தே

சிரத்தையோடு பாடங்களை கற்பித்து

சிந்தையில் அறிவை புகட்டுகிறான்!

* மருத்துவன் எனும் உழைப்பாளி

அக்கறையற்றவர்களுக்கும் சேர்த்தே

புதுப் புது நோய்களோடு போராடி

விலைமதிப்பற்ற உயிரை மீட்கிறான்!

* துப்புரவாளர் எனும் உழைப்பாளி

பொறுப்பற்றவர்களுக்கும் சேர்த்தே

இரவு, பகலாய் துாய்மை பணி செய்து

ஈடில்லா ஆரோக்கியம் காக்கிறான்!

* பத்திரிகையாளன் எனும் உழைப்பாளிபயந்தாங்கொள்ளிகளுக்கும் சேர்த்தே உயிரை பணயம் வைத்து

செய்தி சேகரித்து அளிக்கிறான்!

* ஓட்டுனர் எனும் உழைப்பாளி

உறங்குபவர்களுக்கும் சேர்த்தே

கண் விழித்து கவனமாய் வாகனம் இயக்கி

ஊர் கொண்டு போய் சேர்க்கிறான்!

* இன்னும் பலவகை உழைப்பாளிகள்

வீட்டுக்கும், நாட்டுக்கும் சேர்த்தே

அன்றாடம் ஓய்வின்றி உழைப்பதை

ஆண்டில் ஓர் நாளிலாவது மதித்து

நன்றியோடு போற்றுங்கள்!



- வெ.பாலமுருகன், திருச்சி.தொடர்புக்கு : 89735 19952

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap