PUBLISHED ON : ஜூன் 18, 2025

மல்லிகா மாம்பழம் குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், காவாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சு.ரமேஷ் கூறியதாவது:
மணல் கலந்த களிமண் நிலத்தில், கீரை, வேர்க்கடலை, காய்கறி, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்துள்ளேன். அனைத்து விளை பொருட்களுக்கும், ரசாயன உரங்கள் பயன்பாடு அறவே தவிர்த்துள்ளேன்.
இயற்கை உரங்களை பயன்படுத்தி விளை பொருட்களை சாகுபடி செய்து வருகிறேன்.
அந்த வரிசையில், ஆற்றங்கரை ஒட்டி சவுடு மண் நிலத்தில், மா மரங்களை நட்டுள்ளேன். மரக்கிளை அதிகமாக படர்ந்து, அதிக பழ மகசூல் கொடுத்து வருகிறது.
பூ பூக்கும் போது, இயற்கை ஜீவாமிர்த கரைசலை தெளித்து, பூக்கள் உதிர்வதை தடுக்க முடிகிறது. இதன் வாயிலாக மா சாகுபடியில் அதிக மகசூல் பெற முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: சு.ரமேஷ், 81109 44475.
மணல் கலந்த களிமண் நிலத்தில், கீரை, வேர்க்கடலை, காய்கறி, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்துள்ளேன். அனைத்து விளை பொருட்களுக்கும், ரசாயன உரங்கள் பயன்பாடு அறவே தவிர்த்துள்ளேன்.
இயற்கை உரங்களை பயன்படுத்தி விளை பொருட்களை சாகுபடி செய்து வருகிறேன்.
அந்த வரிசையில், ஆற்றங்கரை ஒட்டி சவுடு மண் நிலத்தில், மா மரங்களை நட்டுள்ளேன். மரக்கிளை அதிகமாக படர்ந்து, அதிக பழ மகசூல் கொடுத்து வருகிறது.
பூ பூக்கும் போது, இயற்கை ஜீவாமிர்த கரைசலை தெளித்து, பூக்கள் உதிர்வதை தடுக்க முடிகிறது. இதன் வாயிலாக மா சாகுபடியில் அதிக மகசூல் பெற முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: சு.ரமேஷ், 81109 44475.


