Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தர்ஷன் அவமதிப்பு மனு அக்., 9க்கு ஒத்திவைப்பு

தர்ஷன் அவமதிப்பு மனு அக்., 9க்கு ஒத்திவைப்பு

தர்ஷன் அவமதிப்பு மனு அக்., 9க்கு ஒத்திவைப்பு

தர்ஷன் அவமதிப்பு மனு அக்., 9க்கு ஒத்திவைப்பு

ADDED : செப் 25, 2025 11:10 PM


Google News
பெங்களூரு:சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், பரப்பன அக்ரஹாரா சிறையில் நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்டு உள்ளார். தனக்கு தலையணை உட்பட அடிப்படை வசதி கேட்டு, நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். நீதிமன்றமும், விதிமுறைகளுக்கு உட்பட்ட வசதிகள் செய்து தரும்படி உத்தரவிட்டிருந்தது.

ஆனால், சிறை அதிகாரிகளோ எந்த வசதியும் செய்துதரவில்லை. இதையடுத்து வசதி செய்து தராத அதிகாரிகள் மீது, நீதிமன்றத்தில் அவமதிப்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அக்., 9 ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us